வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கூலித் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை காரமடை பகுதியில் வசித்து வருபவர் 5 வயது சிறுமி. இவர் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டு இருந்து உள்ளார். அப்போது, காரமடையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன சிறுமி இதுகுறித்து தனது சகோதரியிடம் தெரிவித்து உள்ளார். தொடர்ந்து சிறுமியை உறவினர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர்.
தொடர்ந்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து காரமடை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காரமடையை சேர்ந்த கூலித் தொழிலாளி பத்திரசாமி (45) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…
தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…
தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…
கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…
This website uses cookies.