மதுரை: மேலூர் அருகே நேற்று பெய்த மழையின் காரணமாக திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 5000 நெல் மூட்டைகள் சேதமானதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகம் நெல் சேமிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தின் மதுரை கிழக்கு ஒன்றியம் மற்றும் மேலூர் கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு இங்கு சேமிக்கப்பட்டு வருகிறது .
மூன்று சேமிப்பு கிடங்குகள் உள்ள நிலையில் மேலும் 5000க்கும் அதிகமான மூட்டைகள் நெல்லானது திறந்த வெளியில் வரிசைப்படுத்தப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் முறையாக பாலித்தீன் கவர்கள் கொண்டு மூடப்படாத காரணத்தால், நேற்று பெய்த மழையின் காரணமாக, நெல் மூட்டைகள் மழையில் நனைந்தது.
இதனால் தமிழக அரசிற்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் இல்லையெனில் இவை அரிசிசியாக்கப்படும் போது தரமற்ற சுகாதாரமற்ற அரிசி ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
எனவே இது தொடர்பாக அதிகாரிகள் முறையாக பணியாட்கள் நியமித்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்க வேண்டும் எனவும் அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
விவசாயிகள் கடின உழைப்பின் மூலம் விளைவித்த நெல்மணிகளை அதிகாரிகளின் அலட்சியத்தால் மழையில் நனைய விட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அலட்சியப் போக்கில் நெல் மூட்டைகளை கையாண்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.