திண்டுக்கல் : சிங்கம் பட பாணியில் வேனுக்குள் ரகசிய அறை அமைத்து 546 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படையினர் சின்னாளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பஞ்சம்பட்டி அருகே சேலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) மற்றும் மைசூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (வயது 24) ஆகியோர் ஓட்டி வந்த ஈச்சர் லாரி வண்டியை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் சிங்கம் சினிமா பட பாணியில் 6 அடி அளவில் ரகசிய அதில் அரசால் தடை செய்யப்பட்ட 546 கிலோ (36 முட்டைகள்) குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.
மேலும் விசாரணையில் பஞ்சம்பட்டி பகுதியிலுள்ள ரோஸ் பாண்டி(48) மற்றும் அவரது தம்பி ஜெகன் தினகரன் (45) ஆகியோர்களின் மளிகை கடைக்கு கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரோஸ்பாண்டியையும் அவரது தம்பி ஜெகன் தினகரனையும் கைது செய்து சின்னாளபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மொத்தம் நான்கு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.