தமிழகம்

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு.. பின்னணி என்ன?

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் 7ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் 5ஆம் வகுப்பும் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

மேலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இளைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (டிச.09) காலை வீட்டில் பெற்றோர் மகனுக்கு உணவளித்துவிட்டு, வேலைக்குச் சென்று விட்டனர்.

பின்னர், பெற்றோர் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டில் சிறுவன் இல்லை. இதனால், சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது, சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும், மாயமான சிறுவன் கழுத்தில் ஒன்றரை சவரன் தங்கச் செயினும், ஒரு கிராமில் மோதிரமும் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் சிறுவனைத் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (டிச.10) சிறுவன் வசித்து வந்த வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்து உள்ளார்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு நேரம் குறித்த சன் டிவி : குணசேகரனாக நடிக்கும் பிரபல நடிகர்!

இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், இது குறித்து போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து ஆறு மணி நேரமாகியதாக தெரிவித்து உள்ளனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் சிறுவனின் உடலை கண்டுக் கதறி அழுதனர்.

தொடர்ந்து, மாயமான சிறுவன் நகைக்காக கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Hariharasudhan R

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

11 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

11 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

12 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

12 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

13 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

13 hours ago

This website uses cookies.