காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாத்தி தோப்பு பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் பெண்கள் காப்பகம் செயல் பட்டு வருகின்றது.
இதில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் காதல் தொடர்பான பிரச்சனையிலிருந்து மீட்கபட்ட ஏழு பெண்கள் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அதில் 6 சிறுமிகள் சுவர் ஏரி குதித்து வயல்வெளி வழியாக தப்பி ஓடினர் . ஓடுவதற்கு முன்னதாக செக்யூரிட்டியின் கதவை வெளித்தாழ்ப்பால் போட்டுவிட்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் அரசு காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 6 சிறுமிகள் காணாமல் போனதை கண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குழந்தைகள் நல குழுமத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் 4 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாளர்களும், பணியாளர்களும் முறையாக பணி அமர்த்தபடாதது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த காப்பகத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் தப்பிச் சென்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே பலப்பரீட்சை நடந்தது, அதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி…
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
This website uses cookies.