Categories: தமிழகம்

கனிமவள லாரிகள் மோதி 6 பேர் கொலை.. அமைச்சர் மனோ தங்கராஜ்தான் பொறுப்பு : பொன். ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு!!

கனிமவள லாரிகள் மோதி 6 பேர் கொலை.. அமைச்சர் மனோ தங்கராஜ்தான் பொறுப்பு : பொன். ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு!!

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். முப்பந்தம் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்த அவர் அங்கிருந்து நாகர்கோவில் வந்தார்.

நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் அமைச்சராக இருந்தபோது 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களைகொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன். மீண்டும் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிமவளங்கள் கிடைப்பதில்லை. கனிமவள டாரஸ் லாரிகள் மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோதங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்.அமைச்சர் 6 பேரை கொலைசெய்துயுள்ளார் அதில் நான்கு பேர் கிறிஸ்தவர்கள் அமைச்சருக்கு திமுக கட்சிகாரர்களை பற்றியும் கவலையில்லை ஜாதி காரர்கள் நாடாரை பற்றியும் கவலையில்லை கிறிஸ்தவர்களை பற்றியும் கவலையில்லை குமரி மாவட்ட மக்களுக்காக அவர் இருக்கமாட்டார் என ஆவேசமாக பேசினார்.

அமைச்சரின் பினாமி லாரிகள் என்றாலும் சரி, எந்த லாரியாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கமாட்டோம். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோதங்கராஜ் கூறுகிறார்.

ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அமைச்சரின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை.

இதனால் மூன்று ஆண்டு காலத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நான்குவழி சாலை அமைக்கும் பணிக்காக 1046 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 350 கோடி ரூபாய் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமலாக்கத்துறை பொறுத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த வகையில் தான் காத்திருந்து அவர்கள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள்.

அப்போது அவர் ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால்இது போன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பத்திர விவகாரத்தை பொருத்தவரை நாங்கள்எதையும் மறைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஓபிஎஸ்சுக்கு சிக்னல் காட்டிய இபிஎஸ்.. கூட்டணி உறுதி? திட்டவட்டமான பதிலால் பரபரப்பு!

அதிமுகவைப் பொறுத்தவரை திமுகவைத் தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரியல்ல என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கோயம்புத்தூர்: அதிமுக…

28 minutes ago

ஐபிஎல் கிரிக்கெட்டே கிடையாது..தடை பண்ணுங்க..குஜராத் அணி பவுலர் ஆவேசம்.!

இது கிரிக்கெட் இல்லை,பேட்டிங்! 18வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் அகமதாபாத்…

1 hour ago

பாஜகவுக்கு அனுமதி கேட்ட ஸ்டாலின்.. நொடிக்கு நொடி பேசிய வானதி.. காரசார விவாதம்!

வக்ஃப் வாரியச் சொத்துக்களை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.…

1 hour ago

‘வீர தீர சூரன்’ படத்திற்கு தடை… ரசிகர்கள் ஏமாற்றம்..!

தடைக்கு காரணம் என்ன? விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வீர தீர சூரன் 2 திரைப்படம்,இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள…

2 hours ago

அதிமுகவுக்கு எதிராக தவெக? டெல்லியால் மாறும் ரூட்!

பாஜக உடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் நோக்கில் அதிமுக இருப்பதாக கூறப்படும் நிலையில், தவெக அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும்…

2 hours ago

Camp Fireல் மனித எலும்புகள்.. மதுரைக்கு வந்த Call.. கொடைக்கானல் திகில் சம்பவம்!

கொடைக்கானல் விடுதியில் நண்பர்கள் சேர்ந்து சக தோழரைக் கொன்று கேம்ப் ஃபயரில் போட்டு எரித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து…

4 hours ago