மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்காக பிரம்மாண்ட சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாடும் வானம்பாடி, பாடும் நிலா என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கடந்த 2020ம் ஆண்டு உலகை விட்டு மறைந்தார். தனது வசீகர குரலால் மக்கள் மனதில் இடம் பிடித்த அவருக்கு வயது 74.
அவரது பூவுடல் காஞ்சிபுரம் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த பண்ணை வீட்டில் எஸ்பிபிக்கு நினைவில்லம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஒராண்டாக பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நிறைவடையும் தருவாயில் நினைவில்ல பணிகள் நடந்து வருகிறது. இந்த இடத்தில் 6 டன் எடை கொண்ட பாறையில் எஸ்பிபி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் உள்ள சிற்ப கூடத்தில் உருவாக்கி வருகின்றனர். இதற்காக திருவக்கரையில் 6 டன் எடையில் பாறை எடுக்கப்ப்டடு கடந்த 6 மாதங்களாய் பாறை சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் எஸ்பிபி அவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் சொல்லான ”SARVE JANAASSU JANA BHAVANTHU… SARVESU JANAA SSUKINO BHAVAN”என பொறிக்கப்பட்டுள்ளது.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.