கோவில்பட்டியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகை திருட்டு கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ்நகரைச் சேர்ந்த சந்திரமோகன் (65). இவரது மகன் கார்த்திக். இவர் தேனி மாவட்டம் தமிழ்நாடு மெர்கண்டையல் வங்கி கிளையில் உதவி மேனேஜராக பணியாற்றி வருகிறார். சந்திரமோகன் அவரது மனைவியும், மகன் கார்த்திக்கை பார்ப்பதற்காக கடந்த திங்கள்கிழமை வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
வீட்டில் உள்ள பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக ஊழியர் 2 நாட்களுக்கு ஒரு முறை வந்து செல்வது உண்டு. பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக பணியாளர் சந்திரமோகன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்க பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, பணியாளர்கள் சந்திரமோகன் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.
மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளை நடந்த இடத்தில் கைரேகைகளை பதிவு செய்து ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இதில் வீட்டில் இருந்த 62 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருப்பது தெரிய வந்தது. மேலும், பீரோவில் இருந்த பொருட்கள் எல்லாம் உடைத்து சிதறி கிடந்தது. இது குறித்து. கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 62 பவுன் நகை மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.