கரூர் அருகே வேப்பம்பழம் பறிக்க காட்டுக்குள் சென்ற 65 வயது மூதாட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தில் பக்கத்து வீட்டு பெண்மணி கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த பள்ளி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (65). இவரது கணவர் முத்துச்சாமி (Late). கன்னியம்மாள் கடந்த 18ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள காட்டுக்குள் வேப்பம்பழம் பறிக்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் தேடிச் சென்றனர்.
அப்போது. காட்டுக்குள் உள்ள ஒரு வேப்பமரத்தின் கீழ் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். சம்பவம் குறித்து சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணையை தொடர்ந்து நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியின் பக்கத்து வீட்டு பெண்மணி முருகாயி என்பவர் கொலையாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணையில், மூதாட்டி கன்னியம்மாளிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகாயி இரண்டு பவுன் தங்க நகையை வாங்கிச் சென்று அடமானம் வைத்திருந்ததாகவும், அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் மூதாட்டி தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததால், ஆத்திரத்தில் அருவாளால் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமானால் போதும் பெரிய திரையில் தானாகவே வாய்ப்புகள் வந்து விழும். இது இந்த காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது…
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
This website uses cookies.