திருச்சி : திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பயணியிடம் இருந்த ரூ.66 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் செல்வதற்காக 100க்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையம் வந்தனர். பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பின்னர் விமானத்திற்கு அனுமதித்தனர். அப்போது திருச்சியை சேர்ந்த முகமது யூசுப்( 48) என்பவரின் உடமைகள் மற்றும் அவர் கையில் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர்.
அப்போது அதில் அமெரிக்க, சிங்கப்பூர் டாலர்கள், மலேசியா ரிங்கிட் ஆகிய வௌிநாட்டை சேர்ந்த 66 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சிகளை வைத்திருந்ததை கண்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை செய்த போது பணத்திற்கான உரிய ஆவணமும் இல்லாதது கரன்சிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் யாருக்காக பணத்தை கொண்டு செல்கிறார்..? யார் கொடுத்து அனுப்பியது..? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.