விழுப்புரம் : ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் நகரில் புதுச்சேரி சாலையில் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி MRIC RC பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்விக்கட்டணம் இல்லாததால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்..
இந்நிலையில் விழுப்புரம் அடுத்த பாணம் பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி இங்கு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இந்த பள்ளியில் பணியாற்றிவரும் வகுப்பாசிரியர் ஜெயசீலன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கண்ணீர் மல்க வீட்டில் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் இது குறித்து புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி அந்தப் பள்ளியில் மாணவி மற்றும் புகார் தெரிவிக்கப்பட்ட ஜெயசீலன் வைத்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் தாளாளர் குற்றம்சாட்டப்பட்ட ஜெயசீலன் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.. பள்ளியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கு கடந்த ரெண்டு படங்கள் கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான்…
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயற்குழு, திமுக சார்பு அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம்…
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.…
சின்னத்திரையே, பெரியதிரையோ எதில் உள்ளே நுழைந்தாலும் வந்த உடனே உச்சத்தை தொடுவது அரிதிலும் மிக அரிது. அப்படி வந்த பிரபலங்கள்…
குட் பேட் அக்லி படத்தில் ஷாலினி நடித்துள்ளாரா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை ஷாலினி,அதன் பிறகு…
This website uses cookies.