கோவை : கோவையில் மர்மமான முறையில் இறந்த யானையின் வயிற்றில் 7 மாத கரு இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் பில்லூர் அணை மானார் பிரிவு அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஆனால் யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இதனைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முதுமலை யானைகள் முகாம் வடக்கு கால்நடை மருத்துவர் ராஜேஷ் தோலம்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் கவிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இறந்த யானையின் உடலை பார்வையிட்டு பரிசோதனை செய்தபோது யானையின் வயிற்றில் நன்கு வளர்ந்த 7 மாத கரு இருந்தது தெரியவந்தது. மேலும் யானையின் பின் பகுதியில் ஆண் யானை தந்தத்தால் குத்திய காயம் இருந்தது தெரியவந்தது.
பிரேத பரிசோதனைக்கு பின் பெண் யானையின் உடல் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. வயிற்றில் குட்டியுடன் இருந்த பெண் யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.