கோவை : கோவையில் மர்மமான முறையில் இறந்த யானையின் வயிற்றில் 7 மாத கரு இருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகம் பில்லூர் அணை மானார் பிரிவு அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. ஆனால் யானை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை.
இதனைப் பார்த்த வனத்துறை ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். காரமடை வனச்சரக அலுவலர் மனோகரன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் முதுமலை யானைகள் முகாம் வடக்கு கால்நடை மருத்துவர் ராஜேஷ் தோலம்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் கவிதா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் இறந்த யானையின் உடலை பார்வையிட்டு பரிசோதனை செய்தபோது யானையின் வயிற்றில் நன்கு வளர்ந்த 7 மாத கரு இருந்தது தெரியவந்தது. மேலும் யானையின் பின் பகுதியில் ஆண் யானை தந்தத்தால் குத்திய காயம் இருந்தது தெரியவந்தது.
பிரேத பரிசோதனைக்கு பின் பெண் யானையின் உடல் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் அதே இடத்தில் குழி தோண்டி புதைக்கப்பட்டது. வயிற்றில் குட்டியுடன் இருந்த பெண் யானை உயிரிழந்த சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.