Categories: தமிழகம்

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… திருமணம் செய்ய வற்புறுத்திய 70 வயது முதியவர் : காவல் நிலையத்தில் திரண்ட மக்கள்!!

15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் கிராமம். இந்த கிராமத்தில் ஒரு பகுதியில் 60க்கும் மேற்பட்ட கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் குடிசை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர்.

பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கல்வி பயின்று வரும் நிலையில் 15 வயது சிறுமியை இதே பகுதியில் வசித்து வரும் பாபுஜி என்ற 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு செய்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் இதனால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

6 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

6 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

7 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

8 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

9 hours ago

This website uses cookies.