திருவள்ளூர் ; பொன்னேரியில் சாலையோரத்தில் நின்றிருந்த 70 வயது முதியவரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சுப்பையா. 70 வயது முதியவரான இவர் கட்டுமான தொழிலாளியாக பணி செய்து வருகிறார். சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் சுப்பையாவை மர்ம நபர்கள் மூன்று பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்துடன் மயங்கி விழுந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் பொன்னேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
உடலை மீட்டு பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சுப்பையா அங்குள்ள முனீஸ்வரர் கோவிலை நிர்வாகம் செய்து வந்த போது, அவருக்கும் அங்குள்ள சிலருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில், மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள கொலையாளிகள் மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.