திருவள்ளூர் ; பொன்னேரியில் சாலையோரத்தில் நின்றிருந்த 70 வயது முதியவரை 3 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்தவர் சுப்பையா. 70 வயது முதியவரான இவர் கட்டுமான தொழிலாளியாக பணி செய்து வருகிறார். சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் சுப்பையாவை மர்ம நபர்கள் மூன்று பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தலையில் அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்துடன் மயங்கி விழுந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் பொன்னேரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போது, செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
உடலை மீட்டு பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சுப்பையா அங்குள்ள முனீஸ்வரர் கோவிலை நிர்வாகம் செய்து வந்த போது, அவருக்கும் அங்குள்ள சிலருக்கும் பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில், மூன்று பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து தப்பியோடி தலைமறைவாக உள்ள கொலையாளிகள் மூன்று பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.