கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டின் 75வது சுதந்திர தினம் ஆக்ஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடலாம் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சுதந்திர தின விழா நெருங்கி வரும் நிலையில், தேசியக்கொடி விற்பனை மற்றும் தயாரிப்பு கோவையில் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தேசியக்கொடிகள் தபால் நிலையங்கள் மூலமும் விற்பனை செய்யப்படுகிறது. கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலையங்கள் உட்பட கோவையில் உள்ள 200க்கு மேற்பட்ட தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாட்டின் வகை துணியில் தைக்கப்பட்ட தேசியக்கொடியானது ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தேசியக்கொடியை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறனர். சுதந்திர தின விழா வரை அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் இதனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 3 நாட்கள் வீடுகளில் கொடியேற்றலாம் என்பதை வரவேற்கிறோம். தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்படும் தேசியக்கொடி பளபளப்பாகவும், விலை குறைவாகவும் உள்ளது. அனைவரும் இதனை வாங்கி பயனடையவும்.” என்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.