Categories: தமிழகம்

கோவையில் 75வது சுதந்திர நாள் அமுத பெருவிழா கண்காட்சி: தியாகிகளின் புகைப்பட கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..!!

கோவை: கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் 75 வது சுதந்திர அமுத பெருவிழா கண்காட்சி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடைபெற்றது.

75வது இந்திய சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வ.உ.சி மைதானத்தில் பல்துறை பணி விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன், மற்றும் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

75வது இந்திய சுதந்திர தின பவள விழாவினையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் “சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா” நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் பல்துறை பணிவிளக்க கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி வரும் 6ம் தேதி வரை மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் அரிய புகைப்படங்களின் தொகுப்பு, தேச விடுதலைக்கு வித்திட்ட வீரர்களின் புகைப்படங்கள் குறித்த அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இக்கண்காட்சி நடைபெறும் நாட்களில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், வீரத்தையும் எடுத்துரைக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

UpdateNews360 Rajesh

Recent Posts

தேர்தல் நெருங்கும்போது தெரியும்.. அண்ணாமலை சஸ்பென்ஸ் பேச்சு.. அரசியல் களத்தில் பரபரப்பு!

தேர்தல் நெருங்கும் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இருப்பார்கள் என்று தெரியும் என அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை: சென்னையில்…

6 minutes ago

லேடி சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. நயன்தாரா அறிவிப்புக்கு காரணம் என்ன?

தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என்று நடிகை நயன்தாரா அஜித் குமார் பாணியில் அறிவித்துள்ளார். சென்னை:…

50 minutes ago

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

14 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

15 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

16 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

16 hours ago

This website uses cookies.