Categories: தமிழகம்

7ம் வகுப்பு மாணவி 3 மாத கர்ப்பம் : தனிமையில் இருந்த சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்து வன்கொடுமை செய்த பக்கத்து வீட்டு இளைஞர்!!

கன்னியாகுமரி : 7-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த
கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதியர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 13-வயதில் பெண் குழந்தை உள்ளது.

13-வயதான அந்த சிறுமியை மண்டைக்காட்டை அடுத்த பரப்பற்று பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். 13-வயதான அந்த சிறுமி கடந்த சில தினங்களாக சோர்வடைந்து காணப்பட்ட நிலையில் பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்

அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமுற்று இருப்பதை கண்டு அதிர்ந்து உடனடியாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிற்ச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி 3-மாத கர்ப்பமாக இருப்பதாக குழந்தைகள் நல அதிகாரிகளிடம் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பக்கத்து வீட்டை சேர்ந்த 28-வயதான குமார் என்ற கூலி தொழிலாளி அடிக்கடி வீட்டிற்கு வருவதில் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஒருநாள் பாட்டி இல்லாத நிலையில் வீட்டிற்கு வந்த குமார் தனிமையில் இருந்த தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

அன்று முதல் தான் தனிமையில் வீட்டில் இருக்கும் போது வீட்டிற்கு வரும் குமார் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னையும் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதனையடுத்து சிறுமி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் குழந்தைகள் நல அதிகாரிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் குமார் மீது போக்சோ உள்ளிட்ட 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அவனை கைது செய்து நாகர்கோவில் மகிழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

சிறுமி ஒருவரை கூலி தொழிலாளி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.