காஞ்சி: பிரபல ரவுடியின் வீட்டில் தங்கியிருந்த அவனது கூட்டாளிகள் 8 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சரித்திர பதிவேடு குற்றவாளி லெனின் (36). இவன் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.
மேலும் இவன் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் லெனின் கூட்டாளியான நடுவீரப்பட்டு பகுதியை சார்ந்த நரேஷ் பாபு (26), சுரேஷ்பாபு (30), விக்னேஷ் (23), ஹரிகரன் (21), சென்னை டி.பி.,சத்திரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் (24), மோகன் (24), ஜாபர்கான்பேட்டை விக்னேஷ் (18), பொத்தேரி சேர்ந்தவர் சந்துரு (27) ஆகிய 8 பேரும் குற்ற செயலில் ஈடுபட நடுவீரபட்டில் உள்ள லெனின் வீட்டில் பதுங்கி இருந்தனர்.
இதுகுறித்து சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துப்பாக்கி முனையில் 8 பேரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.
மேலும் 8 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
அர்ஜுன் ரெட்டி நடிகை “அர்ஜுன் ரெட்டி” திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. “அர்ஜுன் ரெட்டி” திரைப்படம்…
This website uses cookies.