திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திராநகர் காமராஜர் தெருவை சேர்ந்தவர் 28 வயதான மஞ்சு பிரியா. பெற்றோரை இழந்த மஞ்சு பிரியா இந்திரா நகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கும் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 50 வயதான சங்கர் பாபு என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
சங்கர் பாபு திருச்சி மாநகரில் பை தைக்கும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. 2 வதாக மஞ்சு பிரியாயை திருமணம் செய்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கனவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பாட்டி வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4 ந்தேதி மஞ்சு பிரியாவின் பாட்டி வெளியில் சென்ற நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மஞ்சு பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இது குறித்து அவரது சகோதரர் சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் சம்பவத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மஞ்சு பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். திருமணமாகி ஐந்து ஆண்டுகளே ஆன நிலையில் இச்சம்பவம் குறித்து திருச்சி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…
This website uses cookies.