திருப்பூர் : நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக புகார் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 52). இவர் திருப்பூர் – அம்மாபாளையத்தில் நகைகடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில் அந்த நகை கடைக்கு தங்க நாணயங்கள் வாங்குவது போல் இரண்டு வாலிபர்கள் முக கவசம் அணிந்து கடைக்குள் புகுந்துள்ளனர். அப்போது கடையில் இருந்த சின்னத்தம்பி அந்த வாலிபர்களிடம் தங்க நாணயங்களை காட்டியுள்ளார்.
பின்னர் வேறு டிசைன் உள்ள தங்க நாணயங்களை காட்டுமாறு வாலிபர்கள் கூறியுள்ளனர். சின்னத்தம்பி தங்க நாணயங்களை எடுக்க திரும்பும்பொழுது, நகைகடையில் இருந்த தங்க நாணயம் பாக்கெட்டை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் 8.5 பவுன் அளவிலான நகைகள் திருடு போனது தெரிந்தது. பட்டப் பகலில் நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 பவுன் தங்க நாணயங்களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.