Categories: தமிழகம்

ரெய்டு விட்ட 80 வயது முதியவர்.. வாண்டடாக மாட்டிக்கிட்ட முகமூடி கொள்ளையர்கள் : துணிச்சலான சம்பவம்!!!

ரெய்டு விட்ட 80 வயது முதியவர்.. வாண்டடாக மாட்டிக்கிட்ட முகமூடி கொள்ளையர்கள் : துணிச்சலான சம்பவம்!!!

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, வடகாடு பகுதியில் வசித்து வரும் வைரக்கண்ணு வயது 83 என்பவரும் அவருடைய மகன் பொதுவுடைமூர்த்தி என்பவருடைய மகன் சஞ்சய்காந்தி வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில்,
வைரக்கண்ணு தனது மருமகள் ஜெயலெட்சுமியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு நள்ளிரவு வீட்டில் இருக்கும்போது, வீட்டிற்கு வெளியே நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது, உடனே வைரக்கண்ணு வெளியே வந்து பார்த்தபோது முகமூடி அணிந்த சந்தேகத்திற்கு இடமான இரண்டு நபர்கள் மற்றும் முகமூடி அணியாத 2 நபர்கள் நின்றுள்ளனர்.

அப்போது முகமுடி அணிந்த இரண்டு நபர்கள் வைரக்கண்ணுவை பிடித்துகொள்ள, முகமுடி அணிந்த மற்ற இருவரும் வைரக்கண்ணுவின் வீட்டிற்குள் சென்று அவரது மருமகளிடம் கத்தியை காட்டி அவர் அணிந்திருந்த நகைகைள பறிக்க முயற்ச்சி செய்துள்ளனர்.

அப்போது வைரக்கண்ணு மற்றும் ஜெயலெட்சுமி சத்தம்போட அவர்களை விட்டுவிட்டு மேற்கண்ட எதிரிகள் தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பிசென்றுள்ளனர்.

இது தொடர்பாக தகவலறிந்த, முத்துப்பேட்டை பொறுப்பு துணைக்காவல் கண்காணிப்பாளர் சரவணன், முத்துப்பேட்டை உட்கோட்ட தனிப்படையினர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதை தொடர்ந்து குற்றவாளிகள் இருசக்கரவாகனத்தில் தப்பி சென்ற வழிதடங்களில் உள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர்.

குறிப்பாக நாச்சிகுளம் ஆவின் பாலகத்தில் உள்ள CCTV காட்சிளில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் நடமாடுவதும் அவர்கள் தொலைபேசி பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக அப்பகுதிகளில் உள்ள CCTV காட்சிகளை தொடர்ந்து அய்வு செய்ததில் சம்பவத்தில் தொடர்புடைய கச்சனம் அம்மனூர் பகுதியை சேர்ந்த பிரவின்குமார் 26, ராஜேஷ் 22, விளத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா 19, கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த சிவனேஷ் ஆகிய நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்தனர்

இந்த நான்கு நபர்களிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது இவர்கள் முத்துப்பேட்டை அருகே பெருக வாழ்ந்தான் பகுதியில் கொத்தனார் வேலை மற்றும் சென்ட்ரிங் வேலை செய்து வருவதாகவும் இரவு நேரங்களில் வடகாடு பகுதியில் உள்ள காட்டின் அருகே சென்று தொடர்ந்து மது அருந்துவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அப்போது வைரக்கண்ணனின் வீடு தனியாக இருப்பதும் அந்த வீட்டை நீண்ட நாட்களாக நோட்டமிட்டு கொள்ளையடிக்க முயற்சி செய்ததாக கூறினார்கள்.

மேலும் சிறப்பாக செயல்பட்டு இரவோடு இரவாக அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்த முத்துப்பேட்டை பொறுப்புத் துறை காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…

11 hours ago

பயங்கரவாதிகளை தேடி தேடி ஒழிக்க வேண்டும் : துணை முதலமைச்சர் பரபரப்பு பேச்சு..!!

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…

12 hours ago

கமல்ஹாசன் செய்த திடீர் புரட்சி! ஓடிடி விநியோகத்தையே தலைகீழாக புரட்டிப்போட்ட சம்பவம்?

புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…

12 hours ago

கட்டுனா மாமனை மட்டும் தான் கட்டுவேன் : ஒரே மேடையில் இரு பெண்களுடன் இளைஞர் திருமணம்..(வீடியோ)!

தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…

13 hours ago

அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?

அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…

13 hours ago

திருமாவுடன் கைக்கோர்க்கும் ராமதாஸ்.. 14 ஆண்டுகளுக்கு பின் மனமாற்றம் : ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்!

தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…

13 hours ago

This website uses cookies.