Categories: தமிழகம்

3 மாதமாக உதவித் தொகை நிறுத்தம்… கண்ணீர் விட்டு முறையிட்ட 85 வயது மூதாட்டி : அடுத்த நிமிடமே நடந்த திருப்பம்!!

மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சுருளியம்மாள் என்ற 85 வயது மூதாட்டி தனது கணவர் ரெங்கசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் யாரும் இல்லாத காரணத்தால் அதே பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மூதாட்டி சுருளியம்மாள் முதியோர் உதவித்தொகை பெற்றுவந்துள்ளார். அதன் மூலமாக வாடகை மற்றும் உணவு மற்றும் மருத்துவ சேவைகளை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக மூதாட்டி சுருளியம்மாளுக்கு வந்துகொண்டிருந்த உதவித்தொகை வராமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாரிடம் கேட்பது என தெரியாமல் தவித்துவந்த முதாட்டி தபால் ஊழியரிடம் கேட்டநிலையில் பணம் வரவில்லை என கூறியுள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்த மூதாட்டி தனது கம்மலை 3 ஆயிரம்ரூபாய்க்கு அடகுவைத்து அதனை பயன்படுத்தி வந்த நிலையில் பணம் முழுவதும் செலவாகிய நிலையில் உணவிற்கு வழியின்றி தவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து தனது முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடக்க கூட முடியாத சூழலில் கை ஊன்றுகோல் கூட இல்லாமல் ப்ளாஸ்டிக் தண்ணீர் பைப் ஒன்றை ஊன்றியபடி கண்ணீருடன் வருகை தந்தார்.

இதனையடுத்து நடக்கமுடியாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்த மூதாட்டி சுருளியம்மாள் செய்தியாளர்களிடம் தனது நிலை குறித்து கண்ணீர்விட்டு அழுதபடி கூறினார்.

இதனையடுத்து சமூக ஆர்வலரான நாகேஸ்வரன் என்பவர் மூதாட்டியின் கோரிக்கை குறித்து மனுவை எழுதிய பின்னர் செய்தியாளர்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அனி்ஸ்சேகரிடம் அழைத்துசென்று மூதாட்டியின் நிலை குறித்து எடுத்துரைத்த நிலையில் உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

அப்போது அதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள் மூதாட்டியின் உதவித்தொகை தொடர்பாக தொடர்பு எண் முறையாக இல்லாத காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறினர்.

இதனையடுத்து உடனடியாக மூதாட்டிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மாத உதவித்தொகையையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து உடனடியாக மூதாட்டி சுருளியம்மாளிடம் 3 மாத உதவித்தொகையையும் மொத்தமாக ரொக்கமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனால் மூதாட்டி மிக்க மகிழ்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.

செல்போன் எண் இல்லை என்பதற்காக மூதாட்டிக்கு நிறுத்திவைக்கப்பட்ட 3 மாத உதவித்தொகையை உடனடியாக கையில் கொடுத்து நடவடிக்கை எடுத்ததோடு இனியும் மாதம்தோறும் எந்தவொரு தடையும் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் மூதாட்டியை பத்திரமாக வீட்டிற்கு ஆட்டோ மூலமாக அழைத்து சென்று விட வேண்டும் எனவும் உத்தவிட்ட நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படத்துல என்ன பிரச்சனை, உங்க கருத்தை சொல்லுங்க- பப்ளிக்கை நேரடியாக சந்தித்த சல்மான் கான்!

படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…

11 hours ago

நீட் தேர்வுக்கான அனைத்துக்கட்சி கூட்டம் ஒரு நாடகம்.. இபிஎஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…

11 hours ago

அட்லீ-அல்லு அர்ஜுன் படத்துக்கு இவர்தான் மியூசிக்கா? பிளாஸ்ட்டா இருக்கே!

பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…

12 hours ago

இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?

தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…

13 hours ago

சுயமரியாதை இருந்தால் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியே போங்க : ஆர்எஸ் பாரதி காட்டம்!

தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…

14 hours ago

This website uses cookies.