Categories: தமிழகம்

3 மாதமாக உதவித் தொகை நிறுத்தம்… கண்ணீர் விட்டு முறையிட்ட 85 வயது மூதாட்டி : அடுத்த நிமிடமே நடந்த திருப்பம்!!

மதுரை மாநகர் கீரைத்துறை பகுதியை சேர்ந்த சுருளியம்மாள் என்ற 85 வயது மூதாட்டி தனது கணவர் ரெங்கசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் பிள்ளைகள் யாரும் இல்லாத காரணத்தால் அதே பகுதியில் வாடகை வீடு ஒன்றில் தனியாக வசித்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மூதாட்டி சுருளியம்மாள் முதியோர் உதவித்தொகை பெற்றுவந்துள்ளார். அதன் மூலமாக வாடகை மற்றும் உணவு மற்றும் மருத்துவ சேவைகளை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3 மாதமாக மூதாட்டி சுருளியம்மாளுக்கு வந்துகொண்டிருந்த உதவித்தொகை வராமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து யாரிடம் கேட்பது என தெரியாமல் தவித்துவந்த முதாட்டி தபால் ஊழியரிடம் கேட்டநிலையில் பணம் வரவில்லை என கூறியுள்ளார்.

இதனால் செய்வதறியாது திகைத்த மூதாட்டி தனது கம்மலை 3 ஆயிரம்ரூபாய்க்கு அடகுவைத்து அதனை பயன்படுத்தி வந்த நிலையில் பணம் முழுவதும் செலவாகிய நிலையில் உணவிற்கு வழியின்றி தவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து தனது முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடக்க கூட முடியாத சூழலில் கை ஊன்றுகோல் கூட இல்லாமல் ப்ளாஸ்டிக் தண்ணீர் பைப் ஒன்றை ஊன்றியபடி கண்ணீருடன் வருகை தந்தார்.

இதனையடுத்து நடக்கமுடியாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்த மூதாட்டி சுருளியம்மாள் செய்தியாளர்களிடம் தனது நிலை குறித்து கண்ணீர்விட்டு அழுதபடி கூறினார்.

இதனையடுத்து சமூக ஆர்வலரான நாகேஸ்வரன் என்பவர் மூதாட்டியின் கோரிக்கை குறித்து மனுவை எழுதிய பின்னர் செய்தியாளர்கள் உதவியுடன் மாவட்ட ஆட்சியர் அனி்ஸ்சேகரிடம் அழைத்துசென்று மூதாட்டியின் நிலை குறித்து எடுத்துரைத்த நிலையில் உடனடியாக சம்மந்தபட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.

அப்போது அதற்கு விளக்கம் அளித்த அதிகாரிகள் மூதாட்டியின் உதவித்தொகை தொடர்பாக தொடர்பு எண் முறையாக இல்லாத காரணத்தால் நிறுத்திவைக்கப்பட்டதாக கூறினர்.

இதனையடுத்து உடனடியாக மூதாட்டிக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 மாத உதவித்தொகையையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதனையடுத்து உடனடியாக மூதாட்டி சுருளியம்மாளிடம் 3 மாத உதவித்தொகையையும் மொத்தமாக ரொக்கமாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதனால் மூதாட்டி மிக்க மகிழ்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியருக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்தார்.

செல்போன் எண் இல்லை என்பதற்காக மூதாட்டிக்கு நிறுத்திவைக்கப்பட்ட 3 மாத உதவித்தொகையை உடனடியாக கையில் கொடுத்து நடவடிக்கை எடுத்ததோடு இனியும் மாதம்தோறும் எந்தவொரு தடையும் இன்றி உதவித்தொகை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் மூதாட்டியை பத்திரமாக வீட்டிற்கு ஆட்டோ மூலமாக அழைத்து சென்று விட வேண்டும் எனவும் உத்தவிட்ட நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

29 minutes ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

42 minutes ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

2 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

2 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

3 hours ago

இவருக்கு இதே வேலையா போச்சு- மோடியை பற்றி பேசிய இளையராஜாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்…

நியமன எம் பி இளையாராஜா இசைஞானி என்று தமிழக மக்களால் போற்றப்படும் இளையராஜா, தற்போது நியமன எம் பி ஆகவும்…

3 hours ago

This website uses cookies.