உயிரை பறித்த 8,550 ரூபாய்.. விவசாயியை கொன்ற வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசப்பா(57). இவரை கடந்த 2017ம் ஆண்டு பேரக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமிநாராயணன்(31) என்பவர், வெங்கடேசப்பா என்பவரை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தேவகாணப்பள்ளி என்னும் கிராமத்திற்கு அருகே உள்ள தைலந்தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளார்.
ஏற்கனவே லட்சுமிநாராயணன் என்பவரின் நண்பர்களான பசவராஜ்(30), சந்தோஷ் குமார்(30) ஆகியோர் ஏற்கனவே காத்திருந்து வெங்கடேசப்பாவை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது
வெங்கடேசப்பா பணம் கொடுக்க மறுத்ததால் மூவரும், கத்தியால் குத்திக்கொலை செய்து 8550 ரூபாய் பணத்தை திருடி சென்றதாக தளி போலிசார் வழக்குப்பதிவு செய்து
இந்த வழக்கு ஒசூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தநிலையில் நீதிபதி திருமதி ரோஸ்லின் துறை அவர்கள் லட்சுமிநாராயணன், பசவராஜ்,சந்தோஷ் குமார் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நிருபணம் செய்து மூவருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்..
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.