கோவையைச் சேர்ந்தவர் 87 வயதான கமலா. இவர் கோவை நிர்மலா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்த நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தவறி கீழே விழுந்ததில் கமலா அவர்களின் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் இருந்தவர் கோவை கங்கா முதுகு தண்டு வட மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து தற்போது குணமடைந்து உள்ளார்.
அப்போது அங்கு சிகிச்சை பெற வந்து இருந்த பலர் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதை பார்த்து உள்ளார்.
இதை அடுத்து அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்ய முன் வந்த கமலா கங்கா முதுகு தண்டு வட மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வரும் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற தேவையான நவீன கருவிகள் வாங்க ரூபாய் 40 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார்.
பேராசிரியர் கமலாவின் சகோதரர் ரோட்டரி தலைவர் ராஜகோபால் கூறியதாவது :- எனது சகோதரி கடந்த ஓராண்டுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நன்றாக குணமாகி வருகிறார்.
கங்கா மருத்துவமனையின் முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. என்பதை அறிந்தோம் அதற்கு எங்களுடைய உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு மருத்துவரை தொடர்பு கொண்டோம்
இதுபோல் பாதிக்கப்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு நாங்கள் செய்த உதவி பேரு உதவியாக இருக்கும் என கமலாவின் சகோதரர் ராஜகோபால் தெரிவித்தார்.
காஞ்சிபுரத்தை சேர்ந்த சஞ்சீவி என்பவர் குடும்பத்துடன் காரில் திண்டுக்கல் சென்றுக்கொண்டிருந்த நிலையில் விழுப்புரம் புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது…
சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
This website uses cookies.