தமிழகம்

தவெக நிர்வாகியின் தொல்லை.. 8ம் வகுப்பு மாணவியின் விபரீத முடிவு!

விழுப்புரத்தில், தவெக நிர்வாகியின் காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இந்த மாணவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி சரவணன் என்பவர் காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனால், அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். எனவே, மாணவியின் தாயார், சரவணனின் பெற்றோரிடம் கூறிக் கண்டித்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாணவியை வழிமறித்த சரவணன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இருப்பினும், அம்மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இந்த நிலையில், அந்த மாணவி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

இதன் பின்னர், மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில், சரவணன் மற்றும் அவரது சகோதரி சங்கீதா ஆகியோர் மீது பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆண்டியால் பறிபோன வாய்ப்பு..நடிகர் கரண் வீழ்ந்தது எப்படி…பிரபலம் சொன்ன அந்த தகவல்.!

மேலும், சரவணனைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது சகோதரியையும் தீவிரமாக தேடி வருகிறனர். மேலும், இந்த விவகாரத்தில் ஏற்கனவே புகார் அளித்தபோது, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் குற்றம் சாட்டி உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

12 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

12 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

13 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

14 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

15 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

17 hours ago

This website uses cookies.