Categories: தமிழகம்

குழந்தை பிறக்க 10 நாட்களே இருந்த நிலையில் சோகம்.. 9 மாத கர்ப்பிணியான பெண் காவலர் விபத்தில் பலி : கணவர் படுகாயம்!!

திண்டுக்கல் : வத்தலகுண்டு பைபாஸ் அருகே நின்றிருந்த லாரியில் கார் மோதியதில் நிறைமாத கர்ப்பிணியான பெண் காவலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முசிறி அருகே தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவர் முசிறியில் காவலராகப் பணி புரிகிறார். இவரது மனைவி திண்டுக்கல் வத்தலக்குண்டு சாலையில் உள்ள வக்கம் பட்டியைச் சேர்ந்த சுகந்தி (வயது 27).

இவரும் திருச்சி காட்டுப்புத்தூரில் காவலராகப் பணிபுரிந்தவர். காவலர்களான கணவன் மனைவி இருவரும் வக்கம்பட்டியில் உள்ள சுகந்தியின் அம்மா வீட்டிற்கு திருச்சியிலிருந்து காரில் வந்துள்ளனர்.

காரினை சுரேஷ்குமார் ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே நேற்று நள்ளிரவில் திண்டுக்கல் வத்தலகுண்டு பைபாஸ் அருகே உள்ள குட்டியபட்டி அருகே இவர்களது கார் வந்தபோது அந்த சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியுள்ளது.

இதில் காரின் முன்புறம் அப்பளமாக நொறுங்கியதில் முன்புறம் அமர்ந்திருந்த சுகந்தி சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து பரிதாபமாக உயிரிழந்தார். சுகந்தி 9 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதிமுக பாஜக கூட்டணி… எனக்கு ஒரு டவுட்டு : பரபரப்பு புகார் கூறிய கனிமொழி எம்பி!

தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…

7 hours ago

சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?

சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…

7 hours ago

Toxic மக்களே, நீங்க எப்படித்தான் வாழ்கிறீர்கள்? வைரலாகும் திரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி…

பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…

9 hours ago

அண்ணாமலை மாற்றம் என அமித்ஷா பதிவிட்ட மறுநொடி.. காரில் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…

9 hours ago

ஒரு வழியாக தொடங்கப்போகுது வாடிவாசல்? ஒரு படத்துக்கு இவ்வளவு இழுபறியா?

இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…

10 hours ago

பொன்முடியின் கொச்சை பேச்சு.. ‘நாக்கு தவறி’ பேசியிருக்கலாம் : அமைச்சர் ரகுபதி ஆதரவு!

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…

11 hours ago

This website uses cookies.