திருப்பூர் : பெருமாநல்லூரில், அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா என்ற போதை பொருளை விற்ற வட மாநில வாலிபர்கள் 5 பேரை பெருமாநல்லூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் அருகே, பெருமாநல்லூர் நால்ரோடு மற்றும் ஈட்டிவீரம்பாளையம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. பெருமாநல்லூர் போலீசார் குழுவினர் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அப்போது பெருமாநல்லூரில் நால்ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 2 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இதில், இவர்கள் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த மதன்மோகன்சாகு (வயது 26), விஸ்வநாதன்சாகு (வயது 23) என்பதும் திருப்பூர் கருவம்பாளையத்தில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.
மேலும் பெருமாநல்லூரில் ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். இவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த குட்டுக்குமார்(வயது 22), ராஜாகுமார்(வயது 23),மற்றும் தர்மேந்திரகுமார் (வயது 22) என்பதும், இவர்கள் முட்டியங்கினறு பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது.
குற்றவாளிகளை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 9 கிலோ கஞ்சா, 1 கிலோ போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.