பழனி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளில் 900 அரிசி மூட்டைகள் மாயமானதால் 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்கு உள்ளது. உரம், அரிசி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இருப்பு வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மதுரை மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளில் சுமார் 900 அரிசி மூட்டைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அரிசி மூட்டை மாயமானது குறித்து மண்டல உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கபட்டது.
இதை அடுத்து நுகர் பொருள் வாணிபக் கிடங்கு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக நுகர் பொருள் வாணிபக் கிடங்கு பொறுப்பாளர் தர்மராஜ், உதவிப் பொறுப்பாளர் ஜெயசங்கர், இளநிலை உதவியாளர் ரங்கசாமி, பட்டியல் எழுத்தர் ஆறுமுகம், உலகநாதன் ஆகிய 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் 900 மூட்டைகள் அரிசி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.