பழனி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளில் 900 அரிசி மூட்டைகள் மாயமானதால் 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்கு உள்ளது. உரம், அரிசி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இருப்பு வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மதுரை மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளில் சுமார் 900 அரிசி மூட்டைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அரிசி மூட்டை மாயமானது குறித்து மண்டல உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கபட்டது.
இதை அடுத்து நுகர் பொருள் வாணிபக் கிடங்கு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, முதற்கட்டமாக நுகர் பொருள் வாணிபக் கிடங்கு பொறுப்பாளர் தர்மராஜ், உதவிப் பொறுப்பாளர் ஜெயசங்கர், இளநிலை உதவியாளர் ரங்கசாமி, பட்டியல் எழுத்தர் ஆறுமுகம், உலகநாதன் ஆகிய 5 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் 900 மூட்டைகள் அரிசி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
This website uses cookies.