மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கியதாக ரூ.97 லட்சம் மோசடி…. கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது.. பணியிடை நீக்கம் செய்து அதிரடி!!

Author: Babu Lakshmanan
2 June 2022, 12:50 pm

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.97 லட்சம் மோசடி செய்து கைதான கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி (38). அன்றைய காலகட்டத்தில் குடியாத்தம் நகரை சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், போலி ஆவணம் மூலம் மோசடி செய்தது உறுதியான நிலையில், கூட்டுறவு வங்கி மேலாளர் உமா மகேஸ்வரியை போலீசார் கைது செய்து வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்று வந்த உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!