Categories: தமிழகம்

9ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளியில் அரங்கேறிய அவலம்.. தலைமையாசிரியருக்கு ‘தர்ம அடி’!!

திண்டிவனம் அருகே அரசுப்பள்ளியில், மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி போலீசார் முன்னிலையில் தலைமையாசிரிருக்கு, பொது மக்கள் ‘தர்ம அடி’ கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டிவனம் அடுத்த விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் கொடியம் கிராமத்தை சேர்ந்த சகலகலாதரன் (வயது 59), என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அப்பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவி தலைமை ஆசிரியரின் அறைக்கு வருகை பதிவேடு எடுக்க சென்றுள்ளார்.

அப்போது, தலைமை ஆசிரியர் அப்பெண்ணுக்கு, சாக்லெட் கொடுத்துள்ளார்.
இதை வாங்கியபோது, தலைமை ஆசிரியர், மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியைடந்த மாணவி, அங்கிருந்து வெளியே வந்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி, வெளியில் யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார். கடந்த ஒருவாரமாக பத்தாம் வகுப்பு தேர்வு பணிக்கு சென்ற தலைமை ஆசிரியர் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அந்த மாணவி, தலைமை ஆசிரியர், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நேற்று சக மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பள்ளியை முற்றுகையிட்டனர். தகவலறிந்த ரோசணை காவல் நிலைய ஆய்வாளர் அன்னக்கொடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று, பள்ளி மாணவி மற்றும் தலைமை ஆசிரியரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

பின்னர் இரவு தாமதம் ஆனதால், காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க தலைமை ஆசிரியரின் முகத்தை மறைத்து, போலீசார் பாதுகாப்பாக வேனில் ஏற்றுவதற்கு அழைத்து வந்தனர்.

அப்போது அவரை, பொது மக்கள் சூழ்ந்து கொண்டு, சராமரியாக தாக்கினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொது மக்களின் பிடியில் இருந்து தலைமை ஆசிரியரை போலீசார் மீட்டு, வேனில் ஏற்றிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியர் சகலகலாதரனிடம், திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மற்றும் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!

20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…

3 hours ago

பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…

4 hours ago

படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!

உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…

5 hours ago

சித்தப்பா முதல் படுத்த படுக்கையாக உள்ள முதியவர் வரை.. 15 வயது சிறுமிக்கு கொடூரம்!

நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…

5 hours ago

வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…

5 hours ago

நாங்க எப்போ சொன்னோம்? நழுவிச் சென்ற பிரேமலதா.. அண்ணாமலை சொன்ன ‘நச்’

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

6 hours ago

This website uses cookies.