கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள தடுப்பணை குட்டை ஒன்றில் முதலை நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது. . கடந்த பருவ மழையின் போது பெய்த மழை காரணமாக வனப்பகுதியில் இருந்து முதலை குட்டைக்கு அடித்து வரப்பட்டது தெரியவந்தது.
இதனால்அச்சமடைந்தகிராமமக்கள்இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.. தகவல் கிடைக்கப்பெற்றதும் வனச்சரக அலுவலர் மனோஜ்தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் குட்டையில் முதலையின் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து குட்டையில் இருக்கும் முதலையைப் பிடிக்க வனத்துறையினர் நேற்று தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குட்டையில் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்ததால் உடனடியாக முதலையைப் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. முதலில் குட்டையில் உள்ள தண்ணீரைவெளியேற்றிய பின்னர் முதலையைப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.
நேற்று காலை முதல் மோட்டார் பம்ப் செட்டுகள் மூலம் குட்டையில் உள்ள தண்ணீரை வெளியேற்றும்பணி தொடங்கியது.
குட்டையில் தண்ணீரின் அளவு அதிகமாகஇருந்ததால் நேற்று காலை தொடங்கப்பட்ட பணி இரவு முழுவதும் விடிய விடியதொடர்ந்துநடைபெற்றது .
முதலை குட்டையை விட்டு வெளியேறாமல் இருக்க குட்டையை சுற்றிலும் நைலான் வலையால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் தண்ணீரின் மட்டம் குறைந்ததும் குட்டையில் முதலை இருப்பது தெரியவந்தது உடனே வனத்துறையினர் கயிற்றால் சுருக்கு அமைத்து போராடி முதலையைப்பிடித்தனர்.
வனத்துறையினர் பிடிபட்ட முதலையை பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் விட்டனர்.இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.