திருவள்ளூர் : பழவேற்காடு அருகே தேங்காய் தொண்டையில் சிக்கி மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதில் இளைய மகன் சஞ்சீஸ்வரன்(3) இன்று காலையில் வீட்டிலிருந்த தேங்காயினை சாப்பிடும்போது தேங்காய் துண்டொன்று தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் குழந்தை மூச்சு திணறி துடிப்பதை கண்டு உறவினர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் மருத்துவமனையில் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருபாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.