ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அந்தியூரை அடுத்த, பர்கூர் மலை கிராமமான சின்னசெங்குலத்தைச் சேர்ந்தவர் மாதேவன். இவரது மனைவி சித்ரா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தொலைபேசி மூலம் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒசூரிலிருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் சித்ராவை அழைத்துச் சென்றது. இந்நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பெரிய செங்குலம் அருகே ஆம்புலன்ஸ் சென்றபோது சித்ராவுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தைச் சாலையோரத்தில் நிறுத்தி, அவசரகால மருத்துவப் பணியாளர் சிவா பிரசவம் பார்த்துள்ளார். இதில், சுகப்பிரசவத்தில் சித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து, பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக தெரிவித்தனர். ஓடும் ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் சிவா மற்றும் ஓட்டுநர் குமரேசன் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.