செங்கல்பட்டு மாவட்டம் பெருந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட பொதுப்பணித்துறை ஏரி உள்ளது இந்த பகுதியில் தினந்தோறும் விவசாயிகள் தங்களது கால்நடைகளை மேய்த்து அவற்றிற்கு தண்ணீர் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அப்பகுதியில் உள்ள முட்புதரில் குழந்தை அழுகும் சத்தம் கேட்டது அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து ஏதோ குழந்தை அழுவது போல் சத்தம் கேட்கிறது என்று முட்பதனின் மேல் பகுதியில் பார்த்தபோது ஒரு கட்டப்பையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது.
உடனடியாக கட்டைப் பையை புதரில் இருந்து வெளியே எடுத்துப் பார்த்தபோது அதில் பிறந்து சில மணி நேரங்களையான ரத்தக்கரையுடன் கூடிய அழகிய ஆண் குழந்தை உள்ளது. அவற்றின் உடல்களில் ஆங்காங்கே எறும்புகள் கடித்தவாறு உள்ளதால் உடல் சிவந்த நிலையில் காணப்பட்டது.
உடனடியாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததின் பேரில் 108 அவசர ஊர்தி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து வந்து குழந்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது குழந்தை நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர் யாருடைய குழந்தை எதற்காக வீசப்பட்டது என்ற கோணத்தில் போலீசார் இப்பகுதிகளில் சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று காலை 11 மணியளவில் பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் செய்தியாளர்கள்…
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா வரதனூர் பஞ்சாயத்து செங்கோட்டை பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் பள்ளி…
ஜெயிலர் 2 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் கோவை வந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதையும் படியுங்க: விஜய் பட…
வெளியானது GBU ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளிவந்துள்ள நிலையில்…
அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது GOOD BAD UGLY திரைப்படம். மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த…
This website uses cookies.