அகில பாரத இந்து மகா சபா சார்பில் சத்ரபதி சிவாஜி ஜென்ம திருவிழா மற்றும் இந்து எழுச்சி பொதுக்கூட்டம் நாகர்கோவில் செம்மங்குடி சாலையில் நேற்று நடந்தது.
மாநகர் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாநில அலுவலக செயலாளர் கோவிந்தன், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சி வந்தாலே இந்துகளை கேலி கிண்டல் செய்வார்கள்.சூடு சொரணை உள்ள இந்துகள் திமுக வில் இருக்ககூடாது.அவர்களுக்கு ஒட்டு போடலாமா.
மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் வித்தியாசமானது. அவள் பத்திரகாளி. மண்டைகாடு என்றாலே கலவரம். வெள்ளைகார ஆட்சியில் கூட மாநாடு நடத்த நாலாயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநில பாரம்பரிய நிகழ்ச்சி. அதனை தடுத்து குழப்பத்தை ஏற்படுத்தவேண்டாம் என்று அறநிலையத்துறை அதிகாரிக்கு சொல்லியுள்ளோம். ஆனால் அவர் இது அரசாங்ககோயில் என்கிறார்.
கோயில் சொத்தில் அரசு நடக்கிறது. உண்டியலை நாங்கள் நிரப்புகிறோம். ஆனால் அதிகாரி நாங்கள் தான் மாநாடு நடத்துவோம். நீ வா இல்லை வராமல் போ.
அறநிலையத்துறை அதிகாரிகள் இப்படி ஒரு முடிவை அவர்கள் எடுப்பார்களே ஆனால் சுசீந்திரத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இந்த மாநாடு எத்தனை ஆண்டுகளாக நடக்கிறது. தக்கலையில் காவடிக்கு தடை விதித்தார்கள்.ஆனால் என்ன நடந்தது. அமைச்சரே ஓடி விட்டார்.
ஆனால் மண்டைகாட்டில் மாநில மாநாடு நடத்தவிடாவிட்டால் திமுகவினரின் கரை வேட்டி எந்த ஊரிலும் வராது உருவிவிடுவோம் குமரி மாவட்டத்தில் திமுகவினர் கரைவேட்டி கட்ட முடியாது.
கரை வேட்டியை கிழித்த சம்பவம் உண்டு. இந்துகளுக்கு ஒரு சக்தி உண்டு.அமைதியாக இருப்பான். மண்டைகாடு ஷாக் அடிக்கும். கவனமாக இருக்கவேண்டும். இங்குள்ள அதிகாரிகள் செயலற்று இருக்கின்றார்கள். அவர்களை செயல்படுத்த வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
டாப் நடிகரிடமே இப்படியா? அஜித்குமார் தமிழ் சினிமாவின் டாப் நடிகர் என்பதையும் அவரை வைக்க படம் இயக்க பல இயக்குனர்கள்…
சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த் நடிக்க வந்த புதிதில் சாக்லேட் பாய் ஆக பல திரைப்படங்களில் வலம் வந்தார். ஆனால் ஒரு…
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி…
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டுக்கு போக வேண்டும் என கூறி வெளிநடப்பு செய்தவர் நடிகர் ஸ்ரீ. வழக்கு எண்…
புதுமை இயக்குனர் பா.ரஞ்சித் திரைப்படங்கள் வெளிவரும்போதெல்லாம் அதனுடன் சேர்ந்து பல சர்ச்சைகளும் கிளம்புவது வழக்கம். தமிழ் சினிமாவில் சமூக ஏற்றத்தாழ்வுகளையும்…
தனது காதலியை பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் சூட்கேஸில் மறைத்து வைத்து அழைத்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம்…
This website uses cookies.