ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மாடு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெமிலி அடுத்த சயனபுரம் காலனியில் வசித்து வருபவர் சேட்டு. இவரது மகன் சஞ்சய் (21). இவர் டிப்ளமோ படித்துவிட்டு சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் தமிழரசன் என்பவரும் நெமிலி பஜாரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது சயனபுரம் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே வரும் போது எதிரே வந்த மாடு மீது அதிவேகமாக மோதியுள்ளனர். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சஞ்சய் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசன் லேசான காயத்துடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.