அண்ணே அண்ணே காப்பாத்துங்க.. 100 அடி கிணற்றில் தவறி விழுந்து கத்திய காட்டெருமை..!

Author: Vignesh
17 ஆகஸ்ட் 2024, 6:49 மணி
Quick Share

சத்தியமங்கலம் அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காட்டு எருமையை தீயணைப்பு துறையினர் உதவியோடு மீட்ட வனத்துறையினர் அதை பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருகே உள்ள புது குய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி. வனப்பகுதியை ஒட்டி இவரது தோட்டம் அமைந்துள்ளது. இவரது தோட்டத்திற்கு அருகாமையிலேயே உள்ள கிணற்றில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டு எருமை ஒன்று எதிா்பாராதவிதமாக சுமார் 100 ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

அதிகாலை கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு எட்டி பார்த்த போது உள்ளே காட்டு எருமை தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மூலம் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த காட்டு எருமையை கிரேன் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு எருமையை பத்திரமாக மீட்டனர். பின்னர், வனக்கால்நடை மருத்துவர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். நீண்ட நேரம் போராடி காட்டு எருமையை மீட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் அப்பகுதி மக்கள் பாரட்டு தெரிவித்தனர்.

  • PK என்ன ஒரு தைரியம்… புதிய கட்சியை தொடங்கி மதுக்கடைகளை திறப்பேன் என பிரசாந்த் கிஷோர் வாக்குறுதி!
  • Views: - 146

    0

    0