குடியாத்தத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தாயை காணவில்லை என கண்ணீருடன் காவல் நிலையத்தில் கண்ணீர் மழுக புகார் – சிறுவனை பாட்டியிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி உண்ணாமலை, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரமேஷ் பாபு மனைவியை பாட்டிலால் தாக்கியதால் மனைவி உண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ்பாபு மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில், இருந்து வெளியே வந்த ரமேஷ் பாபுக்கும் மனைவி உண்ணாமலைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரமேஷ்பாபுக்கும் உண்ணாமலைக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டு மனைவி உண்ணாமலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், உண்ணாமலையின் இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் கணிஷ் என்ற சிறுவன் தாயை காணவில்லை என்று குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.
பின்னர் அங்கு இருந்த காவல்துறையினர் சிறுவனை அழைத்து விசாரணை செய்ததில் தாய்க்கு வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்பதும் அவரை கண்டுபிடித்து தரும்படி காவல்துறை இடம் கேட்டுக் கொண்டார். உடனடியாக சிறுவனை அழைத்துச் சென்று பாட்டியிடம் ஒப்படைத்தன.
பின்னர், உண்ணாமலையை கண்டுபிடித்து தருவதாகவும் விட்டு வெளியே வரும்போது பாட்டி உடன் வரவேண்டும் என்று சிறுவனுக்கு அறிவுரை கூறு போலீசார் பாட்டியிடம் பேரனை ஒப்படைத்து வந்தனர்.
மோகன்லாலின் எம்புரான்… பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான “எம்புரான்” திரைப்படம் ரசிகர்களின்…
சீரியல் நடிகையை காதலிப்பது போல் நடித்து கொலை செய்து உடலை சாக்கடையில் புதைத்த கோவில் பூசாரிக்கு ஆயுள் தண்டனை. 2023…
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
This website uses cookies.