கோவை : கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் கார் சிக்கிக்கொண்டதில் 7 பேர் உயிருக்கு போராடிய காட்சி மனதை உருக வைத்துள்ளது.
கோவையில் நேற்று மாலை பெய்த ஒரு மணி நேர கன மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவையில் உள்ள பாலங்களுக்கு அடியிலும் பெருமளவில் மழைநீர் தேங்கியது.
இந்த நிலையில் கோவை ராம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வடகோவை பகுதிக்கு செல்வதற்காக தங்களுடைய காரில் ராம்நகர் கிக்கானி பள்ளி வழியாக சென்றபோது, ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கியிருந்த மழை நீரை பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முயன்றபோது பாலத்தின் அடியில் தேங்கி இருந்த மழை நீரில் கார் சிக்கிக் கொண்டது.
இதனால் காரில் இருந்த ஏழு பேரும் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு ஏழு பேரையும் பத்திரமாக மீட்டனர்.
இதே போல கனமழை காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியது. இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். கோவை மாநகரப் பகுதியில் அடிக்கடி பெய்து வரும் கனமழையால் பாலம் மற்றும் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தகவல் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.