சிதம்பரம் – நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடைவீதி அருகே கடந்த 21 ஆம் அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிக் கோர விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பூம்புகார் அருகே வானகிரி மீனவர் கிராமம் சுனாமி நகர் பகுதியில் சேர்ந்த ஸ்ரீதர் (22) தனது மனைவி சசிகலா மற்றும் 2 வயது மகன் பாரத் சஞ்ஜன் ஆகியோருடன் தரங்கம்பாடி சாலை வழியாக வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு அதிவேகமாக சென்ற ( NISAN MICRA ) கார் ஒன்று ஸ்ரீதர் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த ஸ்ரீதருக்கு தலையில் பலத்த அடிப்பட்டும், மனைவி சசிகலாவுக்கு தலை, வலது கையிலும், குழந்தை பாரத் சஞ்ஜன் இடுப்பில் அடிப்பட்டு சாலையில் உயிருக்கு போராடி கிடந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொறையார் போலீசார் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் பொறையார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக நாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதில் ஸ்ரீதர் அவரது மனைவி சசிகலா உயிரிழந்தனர். குழந்தை பாரத் சஞ்ஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை ஏற்படுத்திய சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் அருள்சாலமன் (43) என்பவரை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விபத்துக்கான வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இந்நிலையில் கார் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொள்ளும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.