கரூரில் பசுபதீஸ்வரர் ஆலயத்தினை சுற்றி வலம் வரும் குடிமகன்கள் அட்ராசிட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் என்றால் தமிழக அளவில் மட்டுமில்லாமல், தென்னிந்திய அளவில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கும் நிலையில், இந்த ஆலயத்தின் சுற்றுச்சுவரை ஒட்டிய பகுதிகளில் நாளுக்கு நாள் குடி போதையில் போதை ஆசாமிகள் நடத்தி வரும் நிலை தொடர்கின்றது.
அருகில் தான் கரூர் நகர காவல்நிலையம் மற்றும் பேருந்து நிலையம் என்றாலும் சுற்றுப்பகுதிகளில் வலம் சென்று வரும் பக்தர்களுக்கு முழு அளவில் இடையூறு ஏற்படுத்துவதோடு, பட்டப்பகலில் பாட்டீல்களை எடுத்து சென்று அதுவும் பொதுமக்கள் மத்தியில் ஒரு ரெளடி கெட்டப்பில் புல் எனப்படும் மதுபான பாட்டிலில் முக்கால் வாசி குடித்து விட்டு மீதமுள்ள ¼ வாசி சரக்கினை மட்டும் அப்படியே பாட்டிலில் அதுவும் கோயிலின் வெளிப்புற வளாகத்தில் சுற்றுப்பாதையில் தடுமாறியவாறு சென்று அங்கே உள்ள மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஸ்லாப்களில் அமர்ந்து தண்ணீர் அருந்துகின்றனர்.
இந்த காட்சி ஒருபுறம் ஆங்காங்கே வைரலாகி வரும் நிலையில் குடி குடியை கெடுக்கும் என்று பாட்டிலில் எழுதி வைத்து வியாபாரம் செய்து அரசிற்கு அதிக அளவிற்கு வருமானத்தினை கொடுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொகுதியிலேயே அதுவும் அவரது சொந்த ஊரான கரூரிலேயே இப்படி குடிமகன்கள் செய்து வருவது தான் வியப்பின் குறியீடாக உள்ளது.
இதுமட்டுமில்லாமல், காவல்நிலையம் அருகே இருந்தும் ரவுண்ட்ஸ் வரும் போலீஸார் யாரும் இந்த குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தான் பக்தர்களின் கேள்வியாக எழுந்துள்ளது
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
This website uses cookies.