கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் பள்ளி நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில் விஷம் மிகுந்த நல்லபாம்பு ஒன்று பள்ளியில் ஒரு வகுப்பறைக்குள் புகுந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர். இந்நிலையில் அவ்வழியாக வந்த இஎஸ்ஐ மருத்துவமனையில் தோட்ட வேலை செய்து வரும் பாலசுப்ரமணியம் என்பவர் அந்த நல்லப்பாம்பை பிடித்து வெளியேற்றினார்.
அந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த நல்லபாம்பு அவரது இடது கைவிரலில் கடித்துள்ளது. உடனடியாக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றினர். இதனையடுத்து சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பிய பாலசுப்பிரமணியம் நலமுடம் உள்ளார். மாணவர்களின் உயிரை காப்பாற்ற விரைந்து செயல்பட்ட பாலசுப்ரமணியத்தை பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மருத்துவர்கள் என அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.