லாரி மோதி ஜிம்முக்கு பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் கை துண்டானது : கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்!!
Author: Udayachandran RadhaKrishnan18 July 2023, 6:31 pm
திருப்பூர் மங்கலம் ரோடு சின்னாயி லே அவுட் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் தேவானந்த் (வயது 20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் உடல் பயிற்சி செய்வதறக்காக, பார்க் சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கொண்டிருந்த போது, குமரன் ரோடு பார்க் சாலை அருகே வந்த போது, பழைய பேருந்து நிலையத்திலிருந்து வந்த லாரியானது
மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த தேவானந்த் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதில் அவரது வலது கை டயரில் சிக்கி சிதைந்தது.
வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை வாகன ஓட்டிகள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்து குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.