கோவை : குறிப்பிட்ட நேரங்களை மீறி மாநகர பகுதியில் இயங்கிய லாரியால் விபத்து ஏற்பட்டு ஒருவர் பலி இருவர் படுகாயமடைந்தனர்.
கோவையில் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகரபகுதியில் குறிப்பிட்ட நேரங்களை தவிர்த்து லாரிகள் இயக்கப்படுவதல் அடிக்கடி சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த நேர கட்டுப்பாடுகளை மீறி கோவை சரவணம்பட்டி விளாங்குருச்சி சாலையில் அதிவேகமாக வந்த கண்டையெனர் லாரி ஒன்று முன்னால் சென்று கொண்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் இருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த இருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் உயிரிழந்த நபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுனரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக அரசின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் சார்பில் தாம்பரத்தில் பொது கூட்டம் மற்றும் வீதி…
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
This website uses cookies.