தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு அருகே உள்ள கரூர் வைசியா பேங்க் முன்பு உள்ள சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தை உட்பட மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
அரூர் ரவுண்டானாவில் இருந்து நான்கு ரோடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் ஜான் ராஜ் என்பவர் அவருடைய மனைவி மற்றும் 8 மாத குழந்தையுடன் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வாகனத்தை வளைக்க முற்பட்ட பொழுது அந்த வாகனம் எதிரே வந்த வாகனத்தை உரசியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அருகே இருந்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசென்றதில் எட்டு மாத குழந்தைக்கு தலையில் அடிபட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கணவன் மனைவி இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக மூவரும் உயிர் தப்பினர். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இந்த சாலையில் இரும்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினரிடம் பலமுறை இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் பொதுமக்கள் வலியுறுத்தியும் இதுவரை போக்குவரத்து காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே விபத்துக்கள் ஏற்படாத வகையில் இரும்பு தடுப்புகளை அமைத்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.