சென்னையில் கல்லூரி மாணவி ரயிலில் தள்ளி விட்டு கொலைசெய்யப்பட்ட விவகாரம். தமிழகத்தில் கிரிமினல் ஆக்டிவிட்டி நடக்க தான் செய்யும். அதை தாண்டி அரசு எப்படி செயல்படுகிறது என்பதை தான் மக்கள் பார்க்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தக்கலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர் சென்னை மாணவி சத்தியா கொலை செயப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது கிரிமினல் ஆக்டிவிட்டி என்பது அது நடந்து கொண்டு தான் இருக்கும்.
அதை தாண்டி அரசு குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுத்திருக்கும். இந்த நிலையில் விரைவில் தண்டனை வழங்கப்படும். அதே போன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படை மற்றும் கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதை தடுக்க இங்கு கொக்கரித்து கொண்டிருக்கும் பாஜக – வினர் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.
என்னென்றால் இது வெளியறவு துறை விவகாரம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்றக்குழு இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என அவர் தெரிவித்தார்
இர்பான் பதான் கணிப்பு! கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி…
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து வரும் "சர்தார் 2" திரைப்படத்தில் இருந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…
திண்டுக்கல் தியேட்டரில் பரபரப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம்,தனது புதிய திரைப்படமான "வீர தீர சூரன்" வெளியானதை முன்னிட்டு,திண்டுக்கல்…
ஹீரோவாக நடிக்கிறார் VJ சித்து தற்போதைய சினிமா உலகில்யூடியூப் மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிரபலமானவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.அந்த…
நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.இந்த செய்தி திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைக்…
பாடல் ப்ரோமோ வெளியீடு! நடிகர் அஜித் குமார் நடிப்பில்,இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்…
This website uses cookies.