Categories: தமிழகம்

11 வருடங்களுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி.. கை ரேகையால் சிறைக்கு சென்ற விநோத சம்பவம்!!

கடந்த 2012 ஆம் ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அவரது கைரேகையை கொண்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்த மதுரை காவல்துறை.

மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலையத்திறகு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைசாமி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியின் கைவிரல் ரேகை, சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.

தற்போது கைவிரல் ரேகை குறித்த நவீன மென்பொருளான National Automated Finger Print Identification System – NAFIS காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த மென்பொருளின் மூலம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பழைய வழக்குகளில் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்த்த போது, ராமநாதபுரம் கடலாடி காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் சேவுகராஜ் என்பவருடைய விரல் ரேகையுடன் ஒத்துப் போனது உறுதி செய்யப்பட்டது.

தற்போது முதுகுளத்தூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சேவுகராஜ், 2012 ஆம் ஆண்டு வழக்கின் அடிப்படையில் சம்பிரதாய கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருட்டு போன பொருட்களை மீட்கும் முயற்சியை மதுரை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

பதிவான விரல் ரேகையின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குற்ற சம்பவத்தின் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்த விரல் ரேகை வல்லுனர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஓட்டலில் ரகசிய தகவல் அடிப்படையில் போதை தடுப்பு போலீசார்…

5 minutes ago

CM குடும்பத்திற்கு சிறந்த கொத்தடிமை யார்? கருணாநிதி சமாதியில் கோயில் கோபுரம் : அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026ஆம் ஆண்டிற்கான இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையை முன்னிட்டு, அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி…

27 minutes ago

விஜய்க்கு ஒரு நியாயம் விஜயகாந்துக்கு ஒரு நியாயமா? ஃபத்வாவில் ஏன் பாரபட்சம்! பொங்கிய பிரபலம்

விஜய்க்கு ஃபத்வா… விஜய் கடந்த மாதம் சென்னை ஒய் எம் சி ஏ பள்ளிவாசலில் பல இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பில்…

52 minutes ago

கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…

கவுண்ட்டர் மணி… கோலிவுட் வரலாற்றில் கவுண்ட்டர் வசனங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தவர் கவுண்டமணி. சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு ஆயிரத்திற்கும்…

2 hours ago

இரண்டரை வயது குழந்தைனு கூட பார்ககல… அங்கன்வாடி ஊழியர் மீது பரபரப்பு புகார்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய்பட்ட கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி கூலித்தொழிலாளி. இவரது மனைவி…

3 hours ago

சிறுமிகளிடம் சீண்டலில் ஈடுபட்ட மதபோதகரின் உறவினரும் கைது.. அடுத்தடுத்து சிக்கும் தடயம்!

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கிறிஸ்தவ மத போதகர் ஜான் ஜெபராஜ் உறவினரும் போக்சோ வில் கைது செய்யப்பட்டு…

3 hours ago

This website uses cookies.