Categories: தமிழகம்

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம்… பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை விடுத்த சம்பவம்!

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம்… பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை விடுத்த சம்பவம்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் 15 வயதான நிசாந்த்.இவர் அத்தாணி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். மண்ணச்சநல்லூர் பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்தில் முசிறி தாலுக்கா புலிவலம் காலனி தெருவை சேர்ந்த 50 வயதான பெரியசாமி ஓட்டுனராகவும் சமயபுரம் இந்திரா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த 42 வயதான கமல் நடத்துனராகவும் பணியில் இருந்துள்ளனர்.

பள்ளியை முடித்து விட்டு வீட்டிற்க்கு செல்வதற்காக அத்தாணியிலிருந்து நிஷாந்த் அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மணவன் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார்.

மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மணவன் நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

துர்நாற்றம் வீசிய வீடு.. கொடூரமாகக் கிடந்த கருணாஸ் கட்சி நிர்வாகி.. சென்னையில் அதிர்ச்சி!

சென்னை, விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. சென்னை: சென்னையின் விருகம்பாக்கம்,…

3 minutes ago

செங்கோட்டையனும், விஜயும்.. அண்ணாமலை சொன்ன சீக்ரெட்!

மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…

1 hour ago

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

2 hours ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

2 hours ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

3 hours ago

This website uses cookies.