Categories: தமிழகம்

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம்… பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை விடுத்த சம்பவம்!

பேருந்து படிக்கட்டில் ஆபத்தான பயணம்… பள்ளி மாணவனுக்கு நேர்ந்த விபரீதம் : எச்சரிக்கை விடுத்த சம்பவம்!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள திருநகர் 3 வது தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் 15 வயதான நிசாந்த்.இவர் அத்தாணி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். மண்ணச்சநல்லூர் பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து எதுமலை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்தில் முசிறி தாலுக்கா புலிவலம் காலனி தெருவை சேர்ந்த 50 வயதான பெரியசாமி ஓட்டுனராகவும் சமயபுரம் இந்திரா நகர் பாரதியார் தெருவை சேர்ந்த 42 வயதான கமல் நடத்துனராகவும் பணியில் இருந்துள்ளனர்.

பள்ளியை முடித்து விட்டு வீட்டிற்க்கு செல்வதற்காக அத்தாணியிலிருந்து நிஷாந்த் அரசுப் பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டமாக இருந்ததால் மணவன் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார்.

மண்ணச்சநல்லூர் கடைவீதியில் சென்று கொண்டிருந்த போது அரசுப் பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியுள்ளது. அப்போது படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மணவன் நிசாந்த் பேருந்திலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் மாணவனின் இடது காலில் 4 விரல்கள் துண்டானது.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

12 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

12 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.