பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் ஊனம் ஒரு குறையல்ல என்பதை நிரூபித்துக்காட்டிய பள்ளி மாணவன் .
திருப்பூர், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில், நஞ்சப்பா மேல் நிலைப்பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
திருப்பூர், பல்லடம், உடுமலை காங்கேயம், அவினாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
14,17,19 வயது பிரிவில் ஒற்றைக்கம்பு மற்றும் இரட்டைக்கம்பு சுற்றும் போட்டிகளும், வயதின் அடிப்படையில் எடைப்பிரிவில் தொடுமுறை போட்டிகளும் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்கள் மாநில அளவில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி19 முதல் 22 வரை அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பப்போட்டிகள் புதிய விளையாட்டு போட்டிகளில் இடம் பெற்றுள்ளது.
இதனிடையே திருப்பூரில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் உடுமலைபேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவன் சபரிநாதன் தனது ஒரு கையுடன் கைத்தேர்ந்த சிலம்பாட்ட வீரர்களை விட ஒற்றைக்கம்பு விளையாட்டில் சிலம்பத்தை அநாயசமாக சுற்றி பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் போக்கு காட்டி வரும் நிலையில், சாமானியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது மத்திய…
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
This website uses cookies.