Categories: தமிழகம்

திருட்டை மட்டுமே குலத்தொழிலாக செய்த குடும்பம்… பெண் டெய்லரால் வெளுத்துப்போன சாயம்!!!

திருட்டை மட்டுமே குலத்தொழிலாக செய்த குடும்பம்… பெண் டெய்லரால் வெளுத்துப்போன சாயம்!!!

திருப்பூர் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நிர்மலா. இவர் அப்பகுதியில் டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நிர்மலாவின் வீட்டில் 18 பவுன் நகை, ரூ.38;500 திருட்டுப்போனது.

இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் நிர்மலா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நிர்மலாவின் கடைக்கு வந்து செல்லும் மரகதம் என்கிற சுபாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்தார். தொடர் விசாரணை நடத்தியபோது, நிர்மலாவின் கடைக்கு சுபா அடிக்கடி வந்து செல்வதால் இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுகளாக இருவரும் பழகி வந்ததால், நிர்மலா வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை நன்கு தெரிந்து கொண்டார். சம்பவத்தன்று கடையில் இருந்த நிர்மலா வீட்டு சாவியை எடுத்துச் சென்று கதவைத் திறந்து பீரோவில் இருந்த நகை பணத்தை திருடிய சுபா,

கணவர் விக்னேஷ் மற்றும் விக்னேசின் தம்பி தீனதயாளன் ஆகியோரிடம் கொடுத்துவிட்டு, பின்னர் சாவியை நிர்மலாவுக்கு தெரியாமல் அதே இடத்தில் வைத்து சென்றதும் தெரியவந்தது. பின்னர் திருடிய நகைகளை விக்னேசின் தாய் ஈஸ்வரி விற்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து வீரபாண்டி போலீசார் மரகதம் என்கிற சுபா (வயது 28), ஈஸ்வரி (வயது 44), விக்னேஷ் (வயது 30), தீனதயாளன் (வயது 25) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 6 1/2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பள்ளி மாணவருக்கு 6 இடங்களில் வெட்டு.. துண்டான விரல்.. ஸ்ரீவைகுண்டம் அருகே பரபரப்பு!

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…

1 hour ago

விஜயால் ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த பெரும் சிக்கல்.. இதுதான் முடிவு!

சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…

2 hours ago

ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி.. வயல்வெளியில் நடந்த கொடூர சம்பவம்!

ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

3 hours ago

போக்சோ கைதி திடீர் மரணம்.. கோவை மத்திய சிறையில் அடுத்தடுத்து உயிரிழப்புகளால் அதிர்ச்சி!

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

4 hours ago

நான் இசைக்கடவுளா? ரசிகர்களுக்கு இளையராஜா இசைக் கட்டளை!

என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…

4 hours ago

கோலா, நகை விளம்பரம்.. விஜயை மறைமுகமாக சாடிய பிரேமலதா!

சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…

5 hours ago

This website uses cookies.